Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

jayalalithaa-16746081713x2

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விலைமதிப்புமிக்க சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்ற பொருட்கள் அனைத்தும், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp